யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்த சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு குறித்து தான் திருப்தியடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் அந்த இலக்கை அடைவார்களா என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் அரசாங்கம் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவுத் திட்டமொன்றை அனுப்பியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், அந்த முன்மொழிவுகள் குறித்த விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நேரடிப் பேச்சுவார்த்தை குறித்துக் கருத்துத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் மீதும் அதன் தலைவர்கள் மீதும் தான் மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Related Posts
ஈரானிய எண்ணெய் மீதான தடைகளுக்கு இணங்க வேண்டாம்! அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு!
ஈரானிய எண்ணெய் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு இணங்கவோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்த கூடாது என சீனாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஈரானின்...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று மே 6 ஆம்...
உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; பலர் பலி! எரிவாயு விநியோகம் துண்டிப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை சபோரிஷியா நகரில் நடந்த...
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!
ஹார்முஸ் நீரிணையின் வழியாகச் சிக்கித் தவிக்கும் கப்பல்களுக்கு வழிகாட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை குறுகிய காலத்திற்கு இடைநிறுத்தப்படும் என்று ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை மே 5 ஆம்...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறைவு.. அமெரிக்கா வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பு!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் முதற்கட்டத் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராகத்...
பஹ்ரைனுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை வழங்க உக்ரைன் முன்மொழிவு: ஸெலென்ஸ்கி அதிரடி!
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் ஈசா அல் கலீஃபாவைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து...
லண்டனில் ஓடும் வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு; 25 வயது இளைஞர் உயிரிழப்பு – மூவர் காயம்!
தெற்கு லண்டனின் பிரிக்ஸ்டன் (Brixton) பகுதியில் ஓடும் வாகனத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் (Drive-by shooting) 25 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து லண்டன்...
சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஷி...
ஜப்பானில் தொடரும் மக்கள் தொகை சரிவு: குழந்தைகள் எண்ணிக்கை 1.33 கோடியாக வீழ்ச்சி!
ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாகக் குறைந்துள்ளது.ஜப்பானில் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து 45-வது ஆண்டாக சரிவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று மே 5...
ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – டிரம்ப் எச்சரிக்கை
ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக்...










