ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளின் முதற்கட்டத் தாக்குதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையின் இலக்குகள் எட்டப்பட்டு விட்டதாக ரூபியோ உறுதிப்படுத்தினார்.
“ஒபரேஷன் எபிக் ஃபியூரி (Operation Epic Fury) இப்போது நிறைவடைந்தது” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், போரின் தாக்குதல் கட்டம் முடிந்துவிட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி இப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக ரூபியோ குறிப்பிட்டார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்து ஈரானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum of Understanding) எட்ட அமெரிக்கா முன்னுரிமை அளிக்கிறது. அமெரிக்கா அமைதி வழியை விரும்பினாலும், ஈரான் இதுவரை அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் தனது உரையை நிறைவு செய்தார்.










