இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு மின்னியல் நாணயம் (கிரிப்டோகரன்சி) மூலம் நன்கொடைகள் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரியான பிலிப் ரைக்ரோஃப்ட் வழங்கிய 17 பரிந்துரைகளில் ஒன்றாக, வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு ஆண்டுக்கு 100,000 பவுண்ட்ஸ் உச்சவரம்பு நிர்ணயிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெளிநாட்டு நிதியுதவியுடன் இடம்பெறும் இணையவழி அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பிற பரிந்துரைகள் தொடர்பாகஇங்கிலாந்து அரசு தொடர்ந்து பரிசீலனை மேற்கொண்டு வருகிறது.
பிரிட்டிஷ் அரசியலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஆண்டே வெளிநாட்டு நன்கொடைகள் குறித்த விரிவான ஆய்வு தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










