• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் வேடிக்கை பார்த்த அமைச்சர் சந்திரசேகரன் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

admin by admin
January 9, 2026
in இலங்கை செய்திகள்.
0
யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் வேடிக்கை பார்த்த அமைச்சர் சந்திரசேகரன் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் திட்டமிட்டு குழப்பங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அனுர கண்டும் காணாமல் இருப்பாரேயானால் அது எதிர்காலத்தில் அவரது அரசியல் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ரெலோ கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,அண்மை கலங்களாக நடைபெற்று வரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக இருக்கலாம் அல்லது பிரதேச செயலகரீதியாக நடைபெற்றுவரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களாக இருக்கலாம் அவை கடந்த காலத்தை விட தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தக் கூட்டங்களை தலைமை தாங்குகின்ற தலைவர்கள் அதனை சரியாக வழி நடத்துவதற்கு தவறுவது மாத்திரமல்ல, மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிழலும் அதற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றது. 

தமிழ்த தேசியத் தரப்புகள் மிகவும் பலவீனப்பட்டு இருக்கின்றார்கள், அவர்களுக்கு நிர்வாகம் நடத்த தெரியாது, அவர்கள் தான் எல்லாவற்றையும் குழப்புகிறார்கள் என்ற வகையில் காட்டுவதற்கு, குறிப்பாக தமிழ் தேசியம் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் பேச முற்படுகின்றபோது சுயேட்சை குழு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்து பேசுவதை தடுப்பதற்கு தூண்டி விடுகின்ற செயற்பாடு நடைபெறுகின்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மிகக் கேவலமான சபைக்கு ஒவ்வாத சொல்லாடல்களை பயன்படுத்தும்போது அதனை கட்டுப்படுத்தாமல் அமைச்சர் சந்திரசேகரன் வேடிக்கை பார்த்தமை வேதனைக்குரிய விடயம்.

யாழ்ப்பாண மக்களோ அல்லது புத்திஜீவிகளோ அல்லது உலகத்தில் வாழ்கின்ற நாகரிகமான மக்களோ இதனை விரும்பவில்லை. தமிழ் மக்களுடைய நிர்வாகம், ஆளுமை, பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றை எல்லாம் பலவீனப்படுத்துகின்ற நோக்குடனேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

இறுதியாக நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது ஊடகவியலாளர்களின் கேமராக்களில் பிடிபட்ட காட்சிகளை பார்க்கின்ற போது  சுயேட்சை குழு நாடாளுமன்ற உறுப்பினரை ஆளும் தரப்பு எவ்வாறு கையாளுகின்றது என்று தெளிவாக தெரிகின்றது. இது அருவருக்கத்தக்க செயல்.

ஒரு தனிமனிதனை தேவையற்ற வகையில் குற்றம் சாட்டுவது, சபைக்கு உதவாத சொற்பிரியோகங்களை பயன்படுத்துவது எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இவற்றினால் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தார்ப்பரியமே இல்லாமல் போகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது.

தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள் பல இருந்தும் அவை குறித்து பேசி தீர்வு காணாமல் தேவையற்ற விடயங்களை இதில் பேசுவது, அல்லது தங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய விஷயங்களை திசை திருப்புவது, அதாவது தையிட்டி விகாரை விடயத்தை திசை திருப்பி அதை வேறு வகையில் கொண்டு செல்வது, அல்லது அந்த நீதி கூறுகின்ற மக்களை விமர்சிக்கின்ற வகையில்தான் அந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்ட மாறியது.

இந்த விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஜனாதிபதி இது குறித்து தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றார் என்றால் அது அவருடைய எதிர்கால ஆட்சிக்கு நல்லதாக இல்லை. தெருச்சண்டியர்கள் போல் அல்லது வீதியோரத்தில் நின்று சண்டை பிடிக்கின்றவர்கள் போல் கூட்டத்தை நடத்துவது வேதனைக்குரியதாகவே பார்க்கப்படுகின்றது என்றார்.

Related Posts

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

ஹம்பாந்தோட்டையில் கடலில் நீராடச் சென்ற 3 மாணவர்கள் மாயம்!

by selvan
May 30, 2026
0

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடச் சென்ற 3 பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,bஅவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

வித்தியா வழக்கின் கொ*லையாளி ஜெயக்குமாரின் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது

by selvan
May 30, 2026
0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில்,...

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

மஸ்கெலியாவில் வெசாக் தின நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன

by selvan
May 30, 2026
0

மஸ்கெலியாவில் இன்றைய தினம் சிறப்பு வெசாக் ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2570 வது வைசாத்தி மங்கள்ய வருடத்தை முன்னிட்டு சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு தப்போவன...

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

தமது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி தையிட்டியில் போராட்டம்!

by selvan
May 30, 2026
0

யாழ். தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தங்களது பூர்வீகக் காணிகளைத் தங்களிடம் மீளக் கையளிக்குமாறு கோரி, நேற்றும் இன்றும் காணி உரிமையாளர்கள் தொடர்...

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக இருவருக்கு சுமந்திரன் நிதியுதவி

by selvan
May 30, 2026
0

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி கோரியிருந்த முன்னாள் போராளி எதிர்மன்னசிங்கம் கிரேசியனை, இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேரில்...

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நான்கு விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

by selvan
May 30, 2026
0

இலங்கையின் பல பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கேகாலையின் ருவன்வெல்ல பொலிஸ்...

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

by selvan
May 30, 2026
0

இலங்கை இராணுவத்தின் 69ஆவது பதவி நிலை பிரதானியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசேட உயர் பதவி நியமனமானது...

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

தையிட்டி விகாரையை படம் எடுத்த இளைஞர்கள் இருவர் கைது.!

by Mathavi
May 30, 2026
0

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பலாலி பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்....

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!

by Mathavi
May 30, 2026
0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29) மீண்டும்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

by selvan
May 30, 2026
0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி