• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, November 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உண்டு!

Thamil by Thamil
September 1, 2025
in இலங்கை செய்திகள்.
0
உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உண்டு!
Share on FacebookShare on Twitter

உண்மையை அறிந்துகொள்வதற்கும், நீதியை நாடுவதற்குமான உரிமை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அவர்களது உரிமையை உறுதிப்படுத்துவதற்குரிய செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, “வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அரச அதிகாரிகளால் அல்லது அவர்களால் கட்டளையிடப்படுவோரால் இரகசியமாகக் கடத்தப்பட்டு, பின்னர் அவர்கள் எங்கே என்பது பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதற்கு மறுப்பதன் ஊடாக நிகழும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் பற்றியும், அதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் விழிப்புணர்வூட்டும் நோக்கில் இத்தினம் 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இது வலிந்து காணாமலாக்குவதை நிறுத்துமாறும், அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், குற்றவாளிகளைத் தண்டிக்குமாறும், உண்மையை வெளிப்படுத்துமாறும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான இழப்பீட்டை வழங்குமாறும், வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து சகல தரப்பினரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனத்தை உரியவாறு பின்பற்றுமாறும் அரசுகளை வலியுறுத்துவதற்கான தினமாகும்.

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்குப் பதிலின்றி வாழும் குடும்பங்கள் முகங்கொடுத்து வரும் பெருந்துயரத்தை எம்மால் உணரமுடிகிறது. வலிந்து காணாமலாக்கப்படல் என்பது மிகமோசமான மனித உரிமைமீறல் என்பதுடன் அதனூடாக உரிமைகளின் அடிப்படையான கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி என்பன தகர்க்கப்படுகின்றன.

இலங்கையை பொறுத்தமட்டில் வலிந்து காணாமலாக்கப்படல் என்பது தீவிர கரிசனைக்குரிய மனித உரிமைசார் பிரச்சினையாகக் காணப்படுவதாக நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுத்தல், உண்மைகளை கண்டறிதல், இழப்பீடுகளை வழங்கல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் என்பன அரசின் பொறுப்பு எனவும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தியிருக்கிறோம். உண்மையை அறிந்து கொள்வதற்கும், நீதியை நாடுவதற்குமான உரிமை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு இருக்கிறது” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

யாழில் ஹாட்லி மைந்தர்களின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

யாழில் ஹாட்லி மைந்தர்களின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு!

by Thamil
November 18, 2025
0

ஹாட்லி மைந்தர்களின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை - இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களால் நேற்று (17) திங்கட்கிழமை...

அநுராதபுரத்தில் “ஜனனி” வேலைத்திட்டத்தின் இரண்டாவது செயலமர்வு!

அநுராதபுரத்தில் “ஜனனி” வேலைத்திட்டத்தின் இரண்டாவது செயலமர்வு!

by Thamil
November 18, 2025
0

"ஜனனி" வேலைத்திட்டத்தின் அநுராதபுரம் மாவட்டத்தின் இரண்டாவது செயலமர்வானது, 13.11.2025 திகதியன்று “திலகா சிட்டி” விடுதி வளாகத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச்செயலமர்வில், அனுராதபுர மாவட்டத்தின் பல்வேறு அரசியல்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்...

மாணவியை துஷ் – பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

மாணவியை துஷ் – பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

by Thamil
November 18, 2025
0

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை...

‘பொது வளங்களை முகாமைத்துவம் செய்தல்’ திட்டம் ஆரம்பித்து வைப்பு!

‘பொது வளங்களை முகாமைத்துவம் செய்தல்’ திட்டம் ஆரம்பித்து வைப்பு!

by Thamil
November 18, 2025
0

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பத்து இடங்களில் 'பொது வளங்கள் முகாமைத்துவம் செய்தல்' திட்டத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிப்பதன் மூலம் பெண்கள்...

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள்!

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் கரையொதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள்!

by Thamil
November 18, 2025
0

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தென் பகுதியில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் தற்போது வடபகுதி கரையோரங்களில் கரையொதுங்கும் நிலையில் மன்னார் கடற்கரையோரங்களிலும் தற்போது கரையொதுங்கி...

மட்டக்களப்பில் வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு!

மட்டக்களப்பில் வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு!

by Thamil
November 18, 2025
0

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்தும் வகையில் பிரதான கடலுக்குள் வெள்ள நீர்வெளியேற்றம் செய்யும் பிரதான பகுதியான மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....

மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தல்.!

மாவீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தல்.!

by Mathavi
November 18, 2025
0

கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்றைய தினம்...

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.!

by Mathavi
November 18, 2025
0

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச...

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு.!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு.!

by Mathavi
November 18, 2025
0

சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (17) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சுமார் 50 முதல் 55 வயதுடையவர் எனவும், சுமார் 05...

கஞ்சாவுடன் இருவர் கைது.!

கஞ்சாவுடன் இருவர் கைது.!

by Mathavi
November 18, 2025
0

மன்னார் - செல்வநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நேற்று திங்கட்கிழமை (17) இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களிடமிருந்து, 10 கிலோகிராம் 505 கிராம் கேரள...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி