• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு மூன்று ஆசனங்கள்.!

Mathavi by Mathavi
June 4, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
நுவரெலியா மாவட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு மூன்று ஆசனங்கள்.!
Share on FacebookShare on Twitter

ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு நுவரெலியா மாவட்டத்தில் மூன்று ஆசனங்கள் கிடைத்திருப்பதானது, ஈரோஸ் அமைப்பின் 50 வருட வரலாற்றிலும் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் 10 வருட நிறைவிலும் மிக முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கின்றோம்.

எமக்கு வாக்களித்தவர்களை சாதாரணமாகக் கணிக்க முடியாது. பணமும், மதுவும், இலவசங்களும் வாக்காளர்களை கவசமிட்டிருந்தாலும் கூட, அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டு தூய்மையான, நேர்மையான அரசியல் செயற்பாட்டாளர்ளின் தேவையை உணர்ந்து ஈரோஸ் ஜனநாயக முன்னணிக்கு வாக்களித்து தமக்கு மூன்று பிரதிநிதிகளை நியமித்து கொள்ளும் வகையில் வாக்களித்தவர்களுக்கும், வாக்குச் சேகரித்தவர்களுக்கும், வேட்பாளர்களாக களமிறங்கிய சமூக பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மூன்று உறுப்பினர்களுக்கூடாக மக்களுக்கு எந்தளவு பணியாற்ற முடியுமோ அதை நிறைவேற்றுவோம் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.

ஈரோஸ் ஜனநாயக முன்னணி சார்பாக பிரதேச சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஹட்டன் குடாகம கஜானி விருந்தினர் மண்டபத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மலையக பிராந்திய தலைவர் சு.புவனேஸ்வரன்(ராஜா) தலைமையில் இடம்பெற்றது.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-

மலையகத்தில் எமக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் அங்கீகாரத்தை நாம் சாதாரணமாக நினைக்கவில்லை. இதற்கு பின்னால் எமது தோழர்களின் மிகப்பெரிய தியாகங்கள் நிறைந்திருக்கின்றது.

மலையகத் தமிழர்கள் மிகமோசமான ஒடுக்கு முறைகளுக்குள்ளும் அவர்களின் இருப்பு, பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இயக்க அரசியலை வரித்துக் கொண்டு தங்களின் உயிரையும் தியாகம் செய்ய துணிந்த ஈரோஸ் தோழர்களின் எழுச்சியில் உதித்தது தான் ஈரோஸ் ஜனநாயக முன்னணி. இங்கு மக்களின் விடுதலை, விடிவு மட்டுமே எங்களது இலக்காக இருந்தது. அரசியலை பயன்படுத்தி பணம் உழைப்பவர்களுக்கான இடமாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஒருபோதும் இருக்காது. அரசியலை சமூகப் பணியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அமைப்பாக செயற்படுவதற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி எப்போதும் பின்நிற்காது.

இந்த மூவரையும் நாம் பிரதேசபை உறுப்பினர்கள் என்பதற்கப்பால் இந்த நாட்டின் உச்ச சபையான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிகராகப் பார்க்கின்றோம். இந்தப் பொறுப்பை அடையாளமாக வைத்துக் கொண்டு ஊழலற்ற உள்ளூராட்சியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுவோம்.

எல்லை கடந்தும் மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்வோம். அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்போம். வட்டாரங்களில் வெற்றி பெற்றவர்கள் தமது வட்டாரங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான அழுத்தத்தை கொடுப்பவர்களாக செயற்படுவோம். அபிவிருத்தி செயற்பாடுகளுக்கப்பால் மக்களை அரசியல் மயப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அடுத்தடுத்த தேர்தல்களில் சோரம் போகாத வாக்காளர்களை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வோம். மக்கள் யாருடைய வற்புறுத்தலுமின்றி வேட்பாளர்களை மதிப்பீடு செய்து, சுயமாக வாக்களிக்கும் போதுதான் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையாக, தூய்மையாக பணி செய்யக்கூடிய பிரதிநிதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

எமக்கு வாக்களித்தவர்களை சாதரணமானவர்களாக நினைக்கவில்லை. பகுத்தறிந்து வாக்களிக்க தெரிந்த அரசியல் தெளிவு பெற்றவர்களாகவே கருதுகின்றோம். அவர்கள் முழுமையாக எம்மை அவதானித்துக் கொண்டிருப்பார்கள். மக்கள் எங்களை அவதானித்து கொண்டிருக்க வேண்டும். எங்களில் யாராவது மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டால் உடனடியாக எமது கவனத்திற்கு கொண்டு வாருங்கள். அப்போது நாம் “மீள அழைத்துக் கொள்ளும்” கலாசாரத்தை அறிமுகப்படுத்துவோம்.

பெருந்தோட்டப் பகுதி மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களிப்பதற்காக மட்டுமல்ல, பிரதேசசபை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் உரித்துடையவர்கள். நாம் பிரதேசசபை சேவைகளை முழுமையாக பெருந்தோட்டங்களுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழுவீச்சுடன் செயற்படுவோம் என்றார்.

இக்கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் திருக்கோணமலை மாவட்ட பொறுப்பாளருமான கமலச்சந்திரன், மலையகப் பிராந்திய மற்றும் ஊரக வட்டார கிளை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினராக ஜீவன் இராஜேந்திரனும், அக்கரப்பத்தனை பிரதேசசபை உறுப்பினராக தேவராஜ் சிவக்குமாரனும், கொட்டக்கலை பிரதேச சபை உறுப்பினராக கணேசன் இராஜேந்திரனும் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

வைத்தியசாலை மருந்து விற்பனை விவகாரம் ; மூவருக்கு விளக்கமறியல்..!

வைத்தியசாலை மருந்து விற்பனை விவகாரம் ; மூவருக்கு விளக்கமறியல்..!

by Thamil
June 17, 2025
0

வைத்தியசாலை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட மூன்று சந்தேக...

அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல்..!

அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல்..!

by Thamil
June 17, 2025
0

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்றக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம்...

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது..! 

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டு வருகின்றது..! 

by Thamil
June 17, 2025
0

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர் பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (17) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர்...

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

by Thamil
June 17, 2025
0

இன்று (17) மாலை இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது...

முல்லைத்தீவில் தீ பரவும் அபாயம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

முல்லைத்தீவில் தீ பரவும் அபாயம் ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

by Thamil
June 17, 2025
0

முல்லைத்தீவு - வண்ணங்குளம் ஜி.என் பிரிவில் புதர்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தீ பரவியுள்ள இடமானது பனை மரங்களுக்கு அருகில் உள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையைப்...

குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு ; பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு ; பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 17, 2025
0

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். நெடுந்தீவு 3ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம்...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து..!

by Thamil
June 17, 2025
0

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் இன்று (17) எரிபொருள் தாங்கி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்கு...

யாழில் மயங்கிய இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

யாழில் மயங்கிய இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

by Thamil
June 17, 2025
0

யாழில் உணவு அருந்திவிட்டு இருந்த இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் எனோ...

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

by Thamil
June 17, 2025
0

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி