குருநாகலில் போதிராஜா மாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (02) மாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொழும்பு – கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வயோதிபர் ஆவார்.
குருநாகலில் இருந்து மெல்சிறிபுர நோக்கிப் பயணித்த பேருந்தில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து பேருந்தின் சில்லுக்குள் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
ADVERTISEMENT
படுகாயமடைந்த வயோதிபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.