இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் ஊழியர்களுக்கான கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
வவுனியா சாலையில் பணிபுரியும் சாரதிகள், காப்பாளர்கள், பொறியியலாளர்கள் ஆகிய ஊழியர்களுக்கே இவ்வாறு சம்பளம் வழங்கப்படவில்லை. குறித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 8 ஆம் திகதி அவர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் இன்றுடன் 5 நாட்கள் கடக்கின்ற நிலையில் இதுவரை கடந்த மாத சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
பண்டிகைக் காலம் இடம்பெற்றுவரும் நிலையில் தமக்கான சம்பளம் வழங்கப்படாமையினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.