நாவாந்துறை கலைவாணி சனசமூக நிலையத்தின் 50வது பொன்விழாவை முன்னிட்டு அவர்கள் நடாத்திய விளையாட்டுப் போட்டியானது நேற்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அந்தவகையில் நேற்று முன்தினம் சைக்கிள் ஓட்ட போட்டியும், நேற்று காலை மரதன் ஓட்ட போட்டியும் நடைபெற்றது. பின்னர் விளையாட்டுப் போட்டி நேற்றையதினம் ஆரம்பமாகியது.
ரி.ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் பிரதம விருந்தினராகவும், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் மலர்மகள் தயாபரன் சிறப்பு விருந்தினராகவும், ஜே/54 கிராம சேவகர் எஸ்.ரமணன் கௌரவ விருந்தினராகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விளையாட்டுகள் நிறைவடைந்த பின்னர் பரிசில்கள் வழங்கும் வைபவம் நடைபெற்றது.







