வவுனியா பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சார பேரவையும் இணைந்து வவுனியா இசை ஆர்வலர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக “வவுனியாவின் குரல் 2025”என்ற நிகழ்வை நடத்தியிருந்தது.
அதற்கான முதல் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் ஆரம்பித்த நிலையில் நேற்றைய தினம் இறுதிப் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இரு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் 18 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை சதீசன் சுருதியும், இரண்டாவது இடத்தை சந்திரகுமார் ரொசானியும், மூன்றாம் இடத்தை யோகநாதன் கிர்ஸ்சாத் ஆகியோரும் பெற்றுக்கொண்டிருந்தனர்.
மேற்பிரிவில் முதலாம் இடத்தை மகேந்திரன் சிவசக்தி, இரண்டாம் இடத்தை சாந்தரூபன் கலாரஜினி, மூன்றாம் இடத்தை அல்போண்ஸ் மெலிஸ்ரன், செபஸ்ரியான் வினோஜன் ஆகிய இருவர் பெற்றுக் கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு 2025 ஆம் ஆண்டு நடத்தப்படுகின்ற பிரதேச கலாச்சார விழாவில் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இறுதிப் போட்டி நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் நா. கமலதாசன், பிரதேச செயலாளர் இ. பிரதாபன், உதவி பிரதேச செயலாளர் பு. உமாநந்தினி, கலாச்சார உத்தியோகத்தர் க. அபிராமி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. துஜான் உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
