இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவு இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமில்லை, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய படியாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது செய்தியில் தெரிவித்தார்.
ஒரு பெரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்க்க தோட்டாக்களுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்த முடிவு செய்து தங்கள் ஞானத்தையும், ராஜதந்திரத் திறமையையும் வெளிப்படுத்தினார்கள்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நெருங்கிய அண்டை நாடாகவும், நண்பராகவும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய படியாக இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உரையாடலை ஆதரிப்பதாகவும், நமது காலத்தில் பிராந்திய அமைதியை அடைவதற்குத் தேவையான எந்தவொரு பங்களிப்பையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது செய்தியில் மேலும் தெரிவித்தார்.