சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் தேசிய இளைஞர் படைப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கு சமூக மட்ட புனர்வாழ்வு தொடர்பான பயிற்சியானது இன்று (09) தேசிய இளைஞர் படையணி நிறுவனத்தில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு அடையாளம் காண்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு அணுகுமுறை வசதிகளை வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்குகின்ற செயல்முறைகள், மாற்றுத்திறனாளிகளை எதிர்காலத்தில் பயிற்சித் திட்டங்களுக்கு உள்வாங்குதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பும் முறைகள் தொடர்பாக பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதன்போது வளவளராக சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் தவராசா பிரணவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

