மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை இடமாற்றத்தை சுமந்த அதிகாரிகள் தொடராக பல தடவை புத்தளம் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
தவறிழைத்த அரச அதிகாரிகளை புத்தளத்திற்கு அனுப்பும் செயற்பாட்டிற்கு எதிராக இன்று (09) புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று புத்தளம் மாவட்ட தலைமைகளால் நடாத்தப்பட்டது.
இதில் “புத்தளம் சீர்திருத்தப் பள்ளி அல்ல” போன்ற வாசகங்கள் அடங்கிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



