அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மாலை 6:00 மணியளவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தனது கடமை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் வயது 29 என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
ADVERTISEMENT
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
