தமது உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான நபரை தெரிவு செய்வதற்காக மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் எமது கட்சியைப் பொறுத்தவரை வெற்றிக்கான வாய்ப்புகள் எங்குமே பிரகாசமாக காணப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஸ்கந்தவரோதயா கல்லூரியில் தனது வாக்கினை அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”பல சபைகளை நாங்கள் கைப்பற்றுவதற்கு ஏதுவான நிலை காணப்படுகின்றது. அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஜே.வி.பிக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.
சபை அமைக்கின்ற போது தமிழ்க் கட்சிகள் சேர்ந்து தான் சபை அமைக்கின்ற நிலைமை காணப்படுகிறது. இதுவே நடக்கும் என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.
