நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலை முன்னிட்டு, கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட செல்வாநகர் வட்டாரத்தில் நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
செல்வாநகர் வட்டார வேட்பாளர் மாங்குடி தியாகராசா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான அருணாசலம் வேழமாலிகிதன், செல்வாநகர் வட்டார வேட்பாளர் இராமகிருஷ்ணன் பிரதீபன், செல்வாநகர் விளையாட்டுக்கழகத் தலைவர் ராஜ் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
இதன்போது செல்வாநகர் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





