• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் இல்லை.!

Mathavi by Mathavi
April 29, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் இல்லை.!
Share on FacebookShare on Twitter

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (29.04.2025) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

ADVERTISEMENT

ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

நடப்பு ஆண்டின் மூன்றிலொரு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாமல் உள்ளது. எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்வதுடன் அடுத்த ஆண்டு அதிகளவு நிதியைக் கோரவேண்டும். அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களது தலைமைத்துவத்தில்தான் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது.

கடந்த மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப்போல திட்டங்களின் நடைமுறையாக்கங்களை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிடுவதுடன், இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வுக் கூட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

திட்டங்களுக்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யும்போது அவதானம் தேவை. குறைந்த விலையில் கேள்விகூறலைச் சமர்பித்து ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். தவறிழைக்கும் ஒப்பந்தகாரர்களை கறுப்புப் பட்டியலில் உள்வாங்கவேண்டும் என்பதை பல தடவைகள் சொல்லியுள்ளேன். அதை நடைமுறைப்படுத்தவேண்டியது பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகளின் பொறுப்பு. அதைச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்திலாவது பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாசன், நிதி முன்னேற்றம் தொடர்பில் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாக தெரியப்படுத்தினார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிய அவர், கட்டுநிதி விடுவிப்புத் தொடர்பில் தாமதங்கள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டார். அதேபோல மாகாணத்துக்கு எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் உரியவாறு காலாண்டுக்குரியது கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள நிலையான வைப்பு நிதியை அந்தப் பிரதேசங்களின் சிறிய அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாகாணத்தின் நிதியை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். நிரல் அமைச்சுக்கள் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தால் நிதியை விடுவிக்கத் தயாராகவுள்ள நிலையில் தேவையான திட்டங்களைச் சமர்பித்து நிதியைப்பெற்று நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் எம்.கிருபாசுதன் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாகத் தெளிவுபடுத்தினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் நிதிக்கூற்று அறிக்கை புத்தகம் இந்தக் கூட்டத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநரிடம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில், வடக்கு மாகாணத்தில் தற்போது முருங்கை மற்றும் மாம்பழச் செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அது தொடர்பில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், புதிய இனங்களை அறிமுகப்படுத்தும்போது பாரம்பரிய இனங்களை அழிவடையாமலும் பார்த்துக்கொள்வது விவசாயத் திணைக்களத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்கு வலையால் தொழிலை இழந்துள்ள மீனவர்கள்.!

      தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்கு வலையால் தொழிலை இழந்துள்ள மீனவர்கள்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர். சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான மீன்பிடி படகுகள் சென்று...

      பிரதி அமைச்சருக்கும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை.!

      பிரதி அமைச்சருக்கும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்திற்கும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோருக்கிடையிலான தொழிற்சங்க பேச்சுவார்த்தை கடந்த (28) அம்பாறை மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு...

      இந்திய ரோலர்கள் 123 கடலில் புதைக்கப்படும் – நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு.!

      இந்திய ரோலர்கள் 123 கடலில் புதைக்கப்படும் – நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு.!

      by Mathavi
      May 31, 2025
      0

      இலங்கைக் கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில்...

      பிரதமர் பதவியிலும் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படாது.!

      பிரதமர் பதவியிலும் அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படாது.!

      by Mathavi
      May 31, 2025
      0

      "தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளது என்றும், அதனால் வெகுவிரைவில் பிரதமர் பதவியிலும், அமைச்சரவையிலும் மாற்றம் ஏற்படவுள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்...

      தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது.!

      தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது.!

      by Mathavi
      May 31, 2025
      0

      "கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். தமிழ்த் தேசியப் பேரவையான நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி...

      யாழில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.!

      யாழில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.!

      by Mathavi
      May 31, 2025
      0

      நீண்டகாலமாக வீட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் - ஊரெழு பகுதியில் 40 லீற்றர் கசிப்புடன் கைது...

      பாலத்துக்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

      பாலத்துக்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு – அடையாளம் காணப்படவில்லை.!

      by Mathavi
      May 31, 2025
      0

      கொழும்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மோதரை, அளுத்மாவத்தை வீதியிலுள்ள பாலத்துக்கு அருகில் இருந்து நேற்று மேற்படி பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக...

      இளைஞனின் மனிதநேயம் மிக்க செயலால் குவியும் பாராட்டுகள்.!

      இளைஞனின் மனிதநேயம் மிக்க செயலால் குவியும் பாராட்டுகள்.!

      by Mathavi
      May 31, 2025
      0

      வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி அதிகாலை ஏற்பட்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்தின்...

      யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!

      யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது.!

      by Mathavi
      May 31, 2025
      0

      15 கிராம் ஹெரோயின் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞன் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த...

      Load More
      Next Post
      பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது.!

      பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது.!

      பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ஹாசிம் மூஸா-பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி?

      பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ஹாசிம் மூஸா-பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி?

      கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை தவிர்த்து வினைத்திறனாக செயற்படுமாறு தெரிவிப்பு.!

      கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை தவிர்த்து வினைத்திறனாக செயற்படுமாறு தெரிவிப்பு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி