• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் இல்லை.!

Mathavi by Mathavi
April 29, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் இல்லை.!
Share on FacebookShare on Twitter

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தலில் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நிதியை ஒதுக்கிய திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செலவு செய்து முடிக்கவேண்டியது பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் அதற்கு சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட மீளாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (29.04.2025) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

ADVERTISEMENT

ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

நடப்பு ஆண்டின் மூன்றிலொரு காலம் நிறைவடைந்துள்ள நிலையில் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லாமல் உள்ளது. எமது மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகச் செலவு செய்வதுடன் அடுத்த ஆண்டு அதிகளவு நிதியைக் கோரவேண்டும். அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களது தலைமைத்துவத்தில்தான் இந்தத் திட்டங்களின் நடைமுறையாக்கத்தின் வெற்றி தங்கியிருக்கின்றது.

கடந்த மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவித்ததைப்போல திட்டங்களின் நடைமுறையாக்கங்களை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிடுவதுடன், இரு வாரங்களுக்கு ஒரு தடவை மீளாய்வுக் கூட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.

திட்டங்களுக்கான ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்யும்போது அவதானம் தேவை. குறைந்த விலையில் கேள்விகூறலைச் சமர்பித்து ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதை நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிடுவார்கள். தவறிழைக்கும் ஒப்பந்தகாரர்களை கறுப்புப் பட்டியலில் உள்வாங்கவேண்டும் என்பதை பல தடவைகள் சொல்லியுள்ளேன். அதை நடைமுறைப்படுத்தவேண்டியது பிரதிப் பிரதம செயலாளர் – பொறியியல் சேவைகளின் பொறுப்பு. அதைச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்திலாவது பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி எஸ்.குகதாசன், நிதி முன்னேற்றம் தொடர்பில் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாக தெரியப்படுத்தினார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரிய அவர், கட்டுநிதி விடுவிப்புத் தொடர்பில் தாமதங்கள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டார். அதேபோல மாகாணத்துக்கு எதிர்பார்க்கப்பட்ட வரி வருவாய் உரியவாறு காலாண்டுக்குரியது கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள நிலையான வைப்பு நிதியை அந்தப் பிரதேசங்களின் சிறிய அபிவிருத்தி வேலைகளுக்குப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாகாணத்தின் நிதியை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டார். நிரல் அமைச்சுக்கள் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்தால் நிதியை விடுவிக்கத் தயாராகவுள்ள நிலையில் தேவையான திட்டங்களைச் சமர்பித்து நிதியைப்பெற்று நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் திட்டங்களின் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் எம்.கிருபாசுதன் ஒவ்வொரு அமைச்சுக்கள், திணைக்களங்கள் ரீதியாகத் தெளிவுபடுத்தினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் நிதிக்கூற்று அறிக்கை புத்தகம் இந்தக் கூட்டத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநரிடம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில், வடக்கு மாகாணத்தில் தற்போது முருங்கை மற்றும் மாம்பழச் செய்கையில் ஏற்பட்டுள்ள நோய்த் தாக்கம் தொடர்பிலும் ஆராயப்பட்டது. அது தொடர்பில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், புதிய இனங்களை அறிமுகப்படுத்தும்போது பாரம்பரிய இனங்களை அழிவடையாமலும் பார்த்துக்கொள்வது விவசாயத் திணைக்களத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.

Mathavi

Mathavi

Related Posts

காட்டுமிராண்டித்தனமாக செயற்படுபவர்களைத் தடுத்து நினைவேந்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும்.!

காட்டுமிராண்டித்தனமாக செயற்படுபவர்களைத் தடுத்து நினைவேந்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும்.!

by Mathavi
May 19, 2025
0

எமது நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் முகமாக இம்முறை நினைவேந்தல் செய்வதற்கு எமது மக்கள் கொழும்பு - வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்திருந்தனர்....

வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் போராட்டம்.!

வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் போராட்டம்.!

by Mathavi
May 19, 2025
0

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்ப்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதி மக்கள் தமது கிராமத்தின் வீதி மற்றும் பாலத்தினை புனரமைத்து...

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்.!

by Mathavi
May 19, 2025
0

தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடையொன்றின்மீது இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார்...

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர விளக்கம்.!

by Mathavi
May 19, 2025
0

தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை சிறீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்...

வடமராட்சி வடக்கை கைவிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி; மக்கள் ஆதங்கம்.!

வடமராட்சி வடக்கை கைவிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி; மக்கள் ஆதங்கம்.!

by Mathavi
May 19, 2025
0

வடமராட்சி வடக்கை கைவிட்டதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மீது வடமராட்சி வடக்கு மக்கள் தமது ஆதங்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளனர். இது சம்பந்தமாக...

விளக்கமறியலில் இருந்த சாமர எம்.பிக்குப் பிணை.!

விளக்கமறியலில் இருந்த சாமர எம்.பிக்குப் பிணை.!

by Mathavi
May 19, 2025
0

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

நாடு திரும்பும் பஸில் மொட்டுக் கட்சியுடன் அவசர சந்திப்பு.!

நாடு திரும்பும் பஸில் மொட்டுக் கட்சியுடன் அவசர சந்திப்பு.!

by Mathavi
May 19, 2025
0

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை...

தமிழரசின் மீள் எழுச்சியுடன் அநுரவின் வீழ்ச்சி ஆரம்பம்.!

தமிழரசின் மீள் எழுச்சியுடன் அநுரவின் வீழ்ச்சி ஆரம்பம்.!

by Mathavi
May 19, 2025
0

"ஏ.கே.டி.(அநுர குமார திஸநாயக்க) - ஜே.வி.பி. - என்.பி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சிப் பீடத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்" என்று தலைப்பிட்டு, மதிப்பார்ந்த 'பினான்சியல் டைம்ஸ்' பத்திரிகையில்...

மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு.!

மன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு.!

by Mathavi
May 19, 2025
0

தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி. டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபையின் அருட்சகோதரிகள் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு...

Load More
Next Post
பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது.!

பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது.!

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ஹாசிம் மூஸா-பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி?

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ஹாசிம் மூஸா-பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி?

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை தவிர்த்து வினைத்திறனாக செயற்படுமாறு தெரிவிப்பு.!

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை தவிர்த்து வினைத்திறனாக செயற்படுமாறு தெரிவிப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி