கொழும்பில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினி பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஏனென்றால், ஒரு வெளிநாட்டவர் தூதரகத்திற்கு வந்து, அங்கு ஒரு மடிக்கணினியைக் கொடுத்து விட்டு உடனடியாக வெளியேறியுள்ளார்.
அதனால் சிறப்பு அதிரடிப்படை, சிறப்பு அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் பொலிசார் உள்ளிட்ட குழுவை உடனடியாகத் தூதரகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.