நிகழ்வானது நிலைய கொடி ஏற்றி வைக்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், ஆங்கில விசேட வகுப்புகளில் விசேட சித்தி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கல், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல், துடுப்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றி கேடயம் வழங்கல், சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான கேடயம் வழங்கல், நூலக அலுவலர்கள் கௌரவிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
திரு.ம.கஜந்தரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக வலிகாமம் வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.சஞ்சீவனும், கௌரவ விருந்தினர்களாக திரு.திருமதி.பாஸ்கரனும், திருமதி செல்வராணி வேலாயுதம்பிள்ளை ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன், ஆசிரியர்கள், கல்விமான்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.












