வவுனியா வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் பிரதமர் தலைமையில் நெடுங்கேணியில் இடம் பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச சபைக்கு போட்டி இடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரிக்கும் பொது கூட்டம் நெடுங்கேணி பிரதேச சபை மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமர சூரியா அவர்களின் தலைமையில் பொது கூட்டம் இடம் பெற்றுள்ளது.
இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில் பொருளாதார ரீதியில் அடிமட்ட கிராம மக்களை ஒன்று சேர்த்து இந்த நாட்டினை உள்ளக அபிவிருத்தி களையும் மேற்கொள்வதற்கு இப் பிரதேசசபைகளை வெற்றி கொள்ள வேண்டும் என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வுக்கு பிரதி அமைச்சர் R S உபாலி சமரசிங்க அவர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செ.திலகநாதன், ப.ஜெகதீஸ்வரன் ஆகியோரும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.