• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?

Mathavi by Mathavi
May 30, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0
உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?
Share on FacebookShare on Twitter

யாழ். மாநகர சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இருப்பினும் அவர்கள் தமது தவறுகளை திருத்தும் வகையில் செயற்படாமல், தொடர்ச்சியாக அதே தவறுகளை இழைத்து பொறுப்பற்ற விதத்தில் செயற்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கல்லூண்டாய் பகுதியில் உள்ள யாழ். மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் பகுதியில் கழிவுப் பொருட்களுக்கு தொடர்ச்சியாக தீ வைக்தப்படுகிறது. வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளுக்கு இதன்போது தீ வைப்பதால் அந்த புகையானது வீதி எங்கும் பரவுகின்றதுடன் குடிமனைகளுக்குள்ளும் செல்கின்றது.

இதனால் வீதியில் செல்பவர்களும், அண்மித்த பகுதிகளில் குடியிருப்பவர்களும் அந்த புகையை சுவாசிப்பதனால் சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், வீதியில் புகை பரவும்போது எதிரேயும், முன்னேயும் செல்கின்ற வாகனங்கள் கண்களுக்கு தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு உயிராபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்குள் இவ்வாறு ஒருதடவை கழிவுகளை எரியூட்டும்போது அந்த வீதியால் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் வீதியில் சென்றவர்கள் அவருக்கு முதலுதவியளித்த சம்பவமும் இடம்பெற்றது.

உயிர்களுக்கு இழப்புகள் ஏற்படும் பட்சத்தில் யாழ். மாநகர சபையானது அதற்கான இழப்பீடுகளை வழங்குமா? சுகாதாரமான சூழலில் வசிக்க, சுகாதாரமான காற்றை சுவாசிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உள்ளது. இதற்கு யாழ். மாநகர சபையானது குந்தகம் விளைவிப்பது சட்டப்படி குற்றமாகும்.

அதுமட்டுமல்லாமல் யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் உயிரிழந்து காணப்பட்டாலும் அவற்றை மாநகர சபையினர் விரைந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. மேலும், கழிவுப் பொருட்களை கழிவகற்றும் வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது உரிய விதத்தில் எடுத்துச் செல்லாததால் கழிவுப் பொருட்கள் வீதியில் பரவுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

மக்களை பாதுகாக்க வேண்டிய மாநகர சபையே மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவது வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பானதாக காணப்படுகிறது.

இவ்வாறான கழிவுப் பொருட்களை இயற்கை உரமாக மாற்றும் செயற்பாடுகளில் மானிப்பாய் பிரதேச சபையானது ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருக்கின்றபோது இவ்வாறானா கழிவுப் பொருட்களை தம்மிடம் வழங்குமாறும், தாங்கள் அதனை இயற்கை பசளையாக தயாரிப்பதாகவும் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தபோதும் மாநகர சபையானது அந்த கழிவுப் பொருட்களை வழங்க மறுத்துள்ளது.

இனப் படுகொலை தொடர்பான நினைவேந்தல்களை மேற்கொள்வதனை தடுப்பதற்கு நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்யும் பொலிஸாரோ, இது குறித்து செயற்படும் தன்னார்வ நிறுவனங்களோ இவ்வாறான பொதுப் பிரச்சினைகளுக்கு தங்கள் சார்பான வழக்குகளை தாக்கல் செய்வதற்கு ஏன் முயற்சிப்பதில்லை?

இந்த பிரச்சினை இவ்வாறு தொடருமானால் விளைவுகள் வீபரீதமாக இருக்கும். எனவே வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன், மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் (செயல்பாடு) ஸ்.பி.தவகிருபா மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் திரு.ச.கிருஷ்ணேந்திரன் ஆகியோர் இந்த பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
July 19, 2025
0

கடும் காற்றினால் மரக்கிளை முறிந்து விழுந்ததால் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (19) காலை மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம்...

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் (19) திங்கட்கிழமைகாலை 9 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக...

அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொள்கின்றனர்..!

அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொள்கின்றனர்..!

by Thamil
July 19, 2025
0

'வவுனியா மாநகர சபையின் முதல்வரும், பிரதி முதல்வரும் தனக்கு அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில் செய்வதற்கு இடையூறை ஏற்படுத்துவதாக' இலங்கைத் தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகர...

யாழில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா..!

யாழில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா..!

by Thamil
July 19, 2025
0

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று (19) மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, இந்து...

தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

தொழிலாளர் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று (18) தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...

வான் பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்; மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!

வான் பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்; மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!

by Thamil
July 19, 2025
0

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கன மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் வான் பாய்கின்றது. இன்று (19) மதியம் முதல் வான் பாய்கின்றது....

யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

by Thamil
July 19, 2025
0

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்...

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

by User3
July 19, 2025
0

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரியா வத்த சுமத்ராகம கரையோர பகுதியில் சட்ட விரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தகவலறிந்து குறித்த பகுதிக்கு நேற்று...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

by User3
July 19, 2025
0

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார்....

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

by User3
July 19, 2025
0

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தமது பயணத்தின் போது நானு ஓயா புகையிரத நிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடி, கொண்டாடியுள்ளனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி