• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, July 19, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home அம்பாறை செய்திகள்

பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.!

Mathavi by Mathavi
May 30, 2025
in அம்பாறை செய்திகள், இலங்கை செய்திகள்
0
பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.!
Share on FacebookShare on Twitter

நகர, பிரதேச மற்றும் மாநகர சபைகளில் உள்வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இதுவரை பதவி உயர்வு பெறாமல் ஓய்வூதியத்திற்கு சென்று அநியாயமிழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார்.

சங்கத்தின் கல்முனை தலைமைச் செயலகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு குறிப்பிடுகையில்,

1990 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்ட இவர்கள் பல இன்னல்களை அனுபவித்து தனது தொழிலை மேற்கொண்டு வந்தார்கள். அரசாங்கத்தில் உள்வாங்கப்பட்டு, பின்பு மாகாண சபைக்குள் உள்வாங்கப்பட்டு கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்ட பின்பும் கிழக்கு மாகாண சபைக்குள் மீண்டும் உள் வாங்கப்பட்ட உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இப்போதுள்ள புதிய ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மகஜர் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளோம்.

கடந்த ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இந்த விடயமாக கோரிக்கைகள் முன் வைப்பதற்காக முயற்சி செய்து மூன்று மாதங்களின் பின்பு அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது 2023.11.28 ஆம் திகதி அம்பாறையில் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கதைத்தோம். அந்த உத்தியோகபூர்வமான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், ஒரு வருட காலமாகியும் இன்னும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது மனவேதனை அளிக்கிறது.

பின்னர் 2024.08.31 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரின் ஆலோசகரின் அழைப்பின் பேரில் அங்கு சென்று இது சம்பந்தமாக தெளிவுபடுத்தினோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் பிரதம செயலாளரிடமும் இது விடயமாக பேச்சுவார்த்தை நடத்தினோம். முதலமைச்சின் செயலாளரிடம் கதைத்த போது அவர் பின்வருமாறு கூறினார்,
ஆளுநருடன் கோரிக்கைகள் தொடர்பாக வாய்மூல உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டதே தவிர எதுவிதமான எழுத்து மூல கோரிக்கைகளும் முன்வைக்கப்படாததால் எங்களுக்கு நடவடிக்கை எடுக்கமுடியாது என்று கூறினார்.

தொழிலாளர் வர்க்கத்துக்குரிய ஆதரவுடன் வந்த புதிய அரசாங்கம் என்ற அடிப்படையில் புதிய அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் உட்பட அனைவரும் எமது இந்த பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்துவதோடு, 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடாத்தி இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்க முன்வருமாறு புதிய அரசாங்கத்தை வேண்டி நிற்கின்றோம் என்றார்.

Related Posts

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

யாழில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!

by Thamil
July 19, 2025
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் (19) திங்கட்கிழமைகாலை 9 மணியளவில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக...

அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொள்கின்றனர்..!

அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொள்கின்றனர்..!

by Thamil
July 19, 2025
0

'வவுனியா மாநகர சபையின் முதல்வரும், பிரதி முதல்வரும் தனக்கு அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில் செய்வதற்கு இடையூறை ஏற்படுத்துவதாக' இலங்கைத் தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகர...

யாழில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா..!

யாழில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா..!

by Thamil
July 19, 2025
0

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று (19) மானிப்பாய் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு, இந்து...

தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்..!

by Thamil
July 19, 2025
0

தொழிலாளர் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் தொழிலாளர்களின் விடுமுறை தொடர்பாக சம்பந்தப்பட்ட வணிகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று (18) தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...

வான் பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்; மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!

வான் பாயும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்; மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை..!

by Thamil
July 19, 2025
0

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கன மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் வான் பாய்கின்றது. இன்று (19) மதியம் முதல் வான் பாய்கின்றது....

யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

by Thamil
July 19, 2025
0

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்...

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

திருகோணமலை கரையோரத்தில் சட்ட விரோத கட்டிடம்!

by User3
July 19, 2025
0

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரியா வத்த சுமத்ராகம கரையோர பகுதியில் சட்ட விரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தகவலறிந்து குறித்த பகுதிக்கு நேற்று...

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் உண்மைகள் வெளிவரும்; நீதி அமைச்சர் உறுதி!

by User3
July 19, 2025
0

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில், விரைவில் உண்மைகள் வெளிவரும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்தார்....

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கொண்டாட்டம்!

by User3
July 19, 2025
0

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று தமது பயணத்தின் போது நானு ஓயா புகையிரத நிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடி, கொண்டாடியுள்ளனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற...

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்!

by User3
July 19, 2025
0

சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ் தேசிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி