முஸ்லீம் மக்களின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இப்தார் நிகழ்வு இன்றைய தினம் (25-03-2025) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 5.00 மணியளவில் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஆரம்ப நிகழ்வின் கிராஆத் இனை நைபல் மௌலவி வழங்கியதோடு வரவேற்புரையினை சமுர்த்தி உத்தியோகத்தர் தயாத் வழங்கினார். ஆசியுரையினை சர்வமதத் தலைவர்கள் வழங்கியதோடு ரம்ழான் சிந்தனையினை எம்.ஆர்,பைரூஸ் மௌலவி வழங்கினார்.
‘சரியாவின் யதார்த்தம்’ என்னும் நூலை மாவட்ட முஸ்ஸீம் கலாசார உத்தியோகத்தர் திரு.ஆதில் அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைத்தார்.
இன்றைய இந்த புனித நாளில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக பி.ப 6.21 மணிக்கு நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் நிகழ்வு நிறைவடைந்ததது.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட செயலக ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
