• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!

Bharathy by Bharathy
March 6, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!
Share on FacebookShare on Twitter

இன்று 06.03.2025 அன்று நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஊடகங்கள் தொடர்பான விடயதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை –
தமிழில்

கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!

இன்று இந்த அவையின் மறைந்த முன்னாள் உறுப்பினர் மாமனிதர் சிவநேசனின் 17வது ஆண்டு நினைவு நாளாகும். மாமனிதர் சிவனேசன் அவர்கள் கிளைமோர் தாக்குதல் மூலம் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவருக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊடக அமைச்சு குறித்தும் நாங்கள் விவாதித்து வருகிறோம். தமிழ் ஊடக உலகம் இரண்டு தனித்துவமானவர்களை இழந்துள்ளது. தினக்குரல் நிறுவனர் திரு. எஸ்.பி. சாமி மற்றும் தினக்குரல் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகவும் பின்னர் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய திரு.பாரதி இராசநாயகம் ஆகியோருக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கௌரவ அமைச்சர் அவர்களே!

யாழ்ப்பாண போதனா போதனா மருத்துவமனையின் பணிப்பாளரால் கடிதம் ஒன்று எனக்கு வழங்கப்பட்டது. அந்தக் கடிதத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடமும் அவர் சமர்ப்பித்திருந்தார். நான் அதன் பிரதியை உங்களுக்கு வழங்குவேன். அந்தக் கடிதம் மிகவும் விரிவான கடிதமாகும். அதில் ஆளணி மதிப்பாய்வு மற்றும் பல்வேறு தரவுகள் உள்ளன. அந்த விடயத்துக்குள் செல்வதற்கு போதிய நேரம் இல்லாததால் நான் அந்த விடயத்துக்குள் செல்லவில்லை.
இக்கடிதத்தின் மூலம் பணிப்பாளர் உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் கேட்கிறார். குறிப்பாக அவர் ஒரு புதிய மகப்பேறு பிரிவு, இருதயவியல் இருதய மார்பு பிரிவு. உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சைகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் 30 க்கும் மேற்பட்ட சிகிச்சை உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்று தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிட்ட நான்கு விடயங்களில் ஒரு விடயம் தொடர்பாக உங்கள் விசேட கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.

கௌரவ அமைச்சரே!

யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் உள்ள மகப்பேறு விடுதி 2012 இல் பாழடைந்தமையால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் நான்கு விடுதிகளுக்குரிய இடத்தில் 16 விடுதிகள் இப்போது செயல்பட்டு வருகின்றன. நீங்கள் அந்த அலகுக்குச் சென்றால், தாய்மார்கள் தரையில் தூங்கும் ஒரு பயங்கரமான சூழ்நிலையை அவதானிக்கலாம். முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இடத்தில் தற்போதைய விடுதி உள்ளது.. பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் ICU இல் பராமரிக்கப்படும் தங்கள் குழந்தைகளுக்கு பாலுூட்டுவதற்கு தாய்மார்கள் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடந்து செல்லவேண்டும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இந்த விடயத்துக்கு நீங்கள் முன்னுரிமையளிக்க வேண்டும். இந்த விடயங்களை அவதானித்து மகப்பேற்று விடுதி தொடர்பாக உடனடியாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

யாழ்ப்பாண போதனா மருத்துவமனை நாட்டின் நான்காவது தேசிய மருத்துவமனையாக உள்ள நிலையில், அதனை விரிவாக்குவதற்கு பணிப்பாளரால் நிலவசதி கேட்கப்பட்டுள்ளது.. மீனாட்சி அம்மன் வீதியில் உள்ள யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு சொந்தமான இந்த நிலம் தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அந்த நிலத்தை மருத்துவமனைக்குத் திருப்பித் தருமாறு கேட்கிறார். மணிக்கூண்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நிலத்தையும் அவர் கேட்டுள்ளார். எனவே இவை தொடர்பாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கௌரவ அமைச்சரே,

இரண்டாவது முக்கியமாக பிரச்சினையாக குறிப்பிட விரும்புவது தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை பற்றியதாகும். தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் பணியாளர்களைக் கொண்டிருந்தாலும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் போதனா மருத்துவமனையின் கீழ் வரும் புற்றுநோய் பிரிவு ஆகிய இரண்டும் அடிப்படையில் வெவ்வேறானவை. எனவே அங்குள்ள மருத்துவர்கள் தங்கள் சேவைகளை பயனுள்ளதாக வழங்குவதற்குரிய பரிந்துரைகளை எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி புற்றுநோய் பிரிவு சேவைகளை நிர்வகிப்பதற்கென தனி பணிப்பாளர் மற்றும் கணக்காளர் தனி மேட்ரன் தேவையென எதிர்பார்க்கிறார்கள். புற்றுநோய் சேவைகளை நிர்வகிக்கும் அனைத்து ஊழியர்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும். நிதியுதவி தொடர்பாக அவர்கள் கேட்பதும் இதுதான். புற்றுநோய் சேவைகளுக்கு தனித்தனி நிதி ஒதுக்கீடு அவசியமாகும். ஆதார வைத்தியசாலை மற்றும் போதனா மருத்துவமனை இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. எனவே அவர்களுக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

மருத்துவமனையில் உள்ள ஆதரவு சேவைகளைப் பொறுத்தவரை, உயர் தர அடிப்படையில் தற்போதுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நோயியல் நிபுணர் மற்றும் ஆலோசகர், இரத்தவியலாளர்கள் பணியிடங்களுக்கான வெற்றிடங்களை வருடாந்த இடமாற்றத்தின் மூலம் நிரப்ப வேண்டும். புற்றுநோய் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் மன்றாடுகிறார்கள். CT ஸ்கேனர் இல்லாத புற்றுநோய் மருத்துவமனை எப்படி புற்றுநோய் மருத்துவமனையாக இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. எனவே கௌரவ அமைச்சரே! அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

ADVERTISEMENT
Thinakaran
410 722.4K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 2 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 2 days ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 3 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

      வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் இன்று (30) காலை வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை...

      சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

      சீரற்ற காலநிலை காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்வு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      நானுஓயாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 28குடும்பங்களை சேர்ந்த 120 பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளனர்....

      ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

      ஞானச்சுடர் 329ஆவது மலர் வெளியீடும், உதவிகளும்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் ஆன்மீக சஞ்சிகை 329 வது இதழ் வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் சந்நிதியான் ஆச்சிரம...

      பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

      பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிக்குடியின் 5 ஆய்வு முன்மொழிவுகள் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் தெரிவு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை...

      தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கான செயலமர்வு.!

      தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட உறுப்பினர்களுக்கான செயலமர்வு.!

      by Mathavi
      May 30, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் தெரிவாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் மூலம் கட்சி...

      காணாமல்போன தாயைக் கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

      காணாமல்போன தாயைக் கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

      by Mathavi
      May 30, 2025
      0

      தனது தாயரை கடந்த மாதம் 10 ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்று காணாமல் போனவரான...

      முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

      முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்.!

      by Mathavi
      May 30, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்றையதினம் (29) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 2.00 மணிக்கு நிறைவடைந்தது....

      தேனீ கொட்டியதில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை.!

      தேனீ கொட்டியதில் 78 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை.!

      by Mathavi
      May 30, 2025
      0

      முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் 30.05.2025 இன்று தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி...

      வெளியாகியது சுமந்திரன் – கஜேந்திரகுமார் சந்திப்பின் பின்னணி.!

      வெளியாகியது சுமந்திரன் – கஜேந்திரகுமார் சந்திப்பின் பின்னணி.!

      by Mathavi
      May 30, 2025
      0

      தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாருடன் இன்று மாலை நடக்கவிருக்கும் சந்திப்பில் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மட்டுமே பேசப்படும் என்று இலங்கைத் தமிழரசுக்...

      Load More
      Next Post
      கொழும்பில் புற்றுநோக்கு  சிகிச்சை பெற்றாலும் யாழில் சிகிச்சையை தொடரலாம்!

      கொழும்பில் புற்றுநோக்கு  சிகிச்சை பெற்றாலும் யாழில் சிகிச்சையை தொடரலாம்!

      மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

      மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

      வழமையான சேவைக்கு திரும்பிய சிவகங்கை!

      வழமையான சேவைக்கு திரும்பிய சிவகங்கை!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி