வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் இன்று (9)சென்மேரிஸ் நாடக மன்ற பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது
சென்மேரிஸ் நாடக மன்ற தலைவர் தலைமையில் காலை 10.00 மணியளவில் சென்மேரிஸ் நாடக மன்ற மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமானது
தேசியக் கொடி,மங்கள விளக்கேற்றப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தியால் சென்மேரிஸ் நாடக மன்ற பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி,முள்ளியான் கிராம அலுவலர்,வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், சென்மேரிஸ் நாடக மன்ற நிர்வாகத்தினர்,சென்மேரிஸ் கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,சென்மேரிஸ் நிர்வாகத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
