குளவிக்கொட்டுக்கு இலக்கான ஒன்பது பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வீதியிலிருந்த குளவிக்கூடு கலைந்தமையால் வீதியால் சென்ற பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரும் வீதியால் பயணித்தவர்கள் ஆறுபேரும் கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணகிநகர் அம்பிகை வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
ADVERTISEMENT






