• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 30, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் சட்டரீதியற்றது.!

Mathavi by Mathavi
January 29, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் சட்டரீதியற்றது.!
Share on FacebookShare on Twitter

நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு முரணாக இவர்கள் செயற்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் எங்களிற்கு அறிவுரை வழங்கி இருக்கின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணி மீதான வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகசபை ரவீந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் மார்ச் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை கூட்டம் சட்ட ரீதியற்றது என தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்களான சுதாகரன் மற்றும் சூ.சூரியபிரபாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் (28.01) இந்த வழக்கானது வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. கடந்த முறை எதிர்த்தரப்பினராகிய வீ.ஆனந்தசங்கரி உட்பட ஏனையோர் சார்பாக தோன்றிய சட்டத்தரணி வழக்காளிகளால் கோரப்பட்ட நிவாரணங்களை வழங்குவதில் தங்களுக்கு எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை என்று தெரிவித்திருந்தார்கள். அத்தோடு இவ்வழக்கை சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேறு ஒரு தினத்தையும் கேட்டிருந்தனர்.

மேலும், சமாதனத்திற்காக கோரியிருந்தாலும் கூட, சமாதானத்திற்கு முன்னரான தினமே இன்னுமொரு சட்ட விரோத கூட்டத்தினை கூட்டி அதில் சில தீர்மாணங்களை எடுத்ததுடன், சில உறுப்பினர்களையும் கட்சியிலே சேர்த்திருந்தனர். குறித்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது. ஏன்எனின், நீதிமன்றத்தால் இடைக்கால கட்டளை வழங்கப்பட்டிருந்த போதும் அதனை மீறி தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிராளிகளினால் குறித்த கூட்டம் நடாத்தப்பட்டிருந்தது.

குறித்த கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் சட்டவிரோதமானது எனக் கோரி அதனையும் இரத்துச் செய்யக்கோரி நீதிமன்றத்தில் கேட்டிருந்தோம். நீதிமன்றமானது ஏற்கனவே வழங்கப்பட்ட இடைக்கால கட்டளைக்கு எதிரான வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் செயற்பட்டமையால் குறித்த கட்சியின் பொதுச்சபை கூட்டமானது, சட்டரீதியற்றது என்றும், இங்கே நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு முரணாக இவர்கள் செயற்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான ஒரு விண்ணப்பத்தினை செய்யுமாறு நீதிமன்றம் எங்களிற்கு அறிவுரை வழங்கி இருக்கின்றது. மீண்டும் இவ்வழக்கானது விசாரணைக்காக ஏப்ரல் 30ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களான மனுதாரர்கள் சார்பாக சட்டத்தரணி கனகசபை ரவீந்திரன் மற்றும் கீர்த்தனன் ரவீந்திரநாதன் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது.!

by Mathavi
June 30, 2026
0

ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திவெவ பகுதியில், நேற்று (29) திங்கட்கிழமை தொல்பொருள் மதிப்புமிக்க செம்பு பாத்திரம் மற்றும் இரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஜயந்திவெவ பகுதியை...

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

அரசின் பழிவாங்கும் பட்டியலில் எனது பெயரும் உண்டு.!

by Mathavi
June 30, 2026
0

சில குறிப்பிட்ட யூடியூப் சேனல்களை உற்று நோக்கினாலே, அடுத்த 6 மாத காலப்பகுதியில் யார் சிறைக்குச் செல்லப் போகின்றார்கள் என்பதை மிகத் துல்லியமாக அறியமுடிகின்றது என்றும், அவ்வாறு...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.!

by Mathavi
June 30, 2026
0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குவதாகத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசுக்கு அதனை நீக்கும் எண்ணம் இல்லை என்றும், எதிர்க்கட்சியினரை அடக்குவதற்காகவே அந்தச் சட்டம் தொடர்ந்து...

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பே இல்லை.!

இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பே இல்லை.!

by Mathavi
June 30, 2026
0

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் நிலவும் முட்டுக்கட்டைக்கு உடனடியாகத் தீர்வு...

எங்களை அசைக்கவே முடியாது.!

எங்களை அசைக்கவே முடியாது.!

by Mathavi
June 30, 2026
0

மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசின்...

கணக்குக் காட்டாத வேட்பாளர்களுக்கு செக்.!

கணக்குக் காட்டாத வேட்பாளர்களுக்கு செக்.!

by Mathavi
June 30, 2026
0

தேர்தல் பிரச்சார செலவீன அறிக்கைகளைச் சட்டபூர்வ காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகளின் தற்போதைய...

கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்; குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

by Mathavi
June 30, 2026
0

கம்பஹா மாவட்டம், தொம்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

மக்களின் பணத்தைப் பிடுங்கி மக்களுக்கே கொடுக்கும் அரசு.!

மக்களின் பணத்தைப் பிடுங்கி மக்களுக்கே கொடுக்கும் அரசு.!

by Mathavi
June 30, 2026
0

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த 3 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் மக்களின் உண்மையான வருமானம் எந்த வகையிலும் அதிகரிக்கவில்லை என்றும், மக்களிடமிருந்து வரியாகப் பெறப்படும் பணமே மீண்டும்...

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

மலையகத்தின் பல பகுதிகளில் தன்சல் நிகழ்வுகள்!

by selvan
June 29, 2026
0

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளில் தான சாலை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. மாஸ்கெலிய, நியூ சமன்புரா  ஸ்டோர்ஸ் வளாகத்தில் அதன் உரிமையாளரின் ஏற்பாட்டில் ஜஸ்கிரீம்...

கேகாலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

கேகாலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு!

by selvan
June 29, 2026
0

கேகாலை மாவட்டம், கலிகமுவை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் இன்று திங்கட்கிழமை மாலை அவரது வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கலிகமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி