கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நாளையிலிருந்து ஆரம்பமாகவிருந்த புதிய பேருந்து சேவை வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சங்கத்தினரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வீதி அதிகார சபையின் அனுமதியுடன் நாளைய தினம் புதிதாக கேவில் – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – கேவில் போக்குவரத்து சேவையை வழங்கவிருந்த தனியார் பேருந்தானது வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சங்கத்தின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டது.
நேற்றைய தினம் குறித்த பேருந்து நிறுவுனருக்கு வீதி அதிகார சபையால் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்ட போதும் தொடர்ந்து வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சங்கத்தினரின் தலையீட்டினால் மீண்டும் இன்றைய தினம் வீதி போக்குவரத்து அதிகார சபையால் அந்த பயணத்தை மறு அறிவித்தல் வரும் வரை தொடர வேண்டாம் என்று பிறிதொரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.