வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு வகுறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர்.
இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் (13.02) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிசாரிடம் தெரிவித்தார்.
காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து கஞ்சி...
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்.!
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் யாழ். மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (17)...
தேசியத் தலைவரால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொன்னாலை மண்ணில் நினைவேந்தல்.!
தேசியத் தலைவர் என்று தமிழ் மக்களால் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை - பொன்னாலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி போராடி வந்த தாய் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த...
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலுத்தாகொடை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர்...
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகொல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலுகொல்ல - கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழ போரின் வலி...
முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் செந்நீரை பாய்ச்சி உயிரை பறித்தார்கள்.!
வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு - கற்சிலை மடுவில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு...
மலையக மக்களின் காணி உரிமைக்கான கொள்கைப் பிரகடனமும் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ நாடக அரங்கேற்றமும்.!
மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி, சங்கு கலைக்கழகம் (SANGU SKK) மற்றும் சிட்ப்ஸ் (SIDPS) நிறுவனம் இணைந்து தயாரித்த கொள்கைப் பிரகடனம் வெளியீட்டு விழா, கடந்த...









