சிறிலங்காவின் 76ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அதற்கு மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலர் பிரதீப் யசரத்ன நேற்றுத் தெரிவித்தார். எனவே எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை சுதந்திரதினம் வருவதால், அதற்கடுத்த நாள் திங்கட்கிழமையை அரசாங்கம் விடுமுறையாகப் பிரகடனம் செய்யவேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்த நிலையிலேயே பொது நிர்வாக அமைச்சின் செயலர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கலந்துரையாடல்!
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(19)காலை திருக்கேதீஸ்வர ஆலய சம்பந்தர் மண்டபத்தில் இடம்பெற்றது. -மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்...