வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் அணிகள் தொடர்ந்து 5வருடமாக 1ம் இடம்! (படங்கள் இணைப்பு)

0 168
வட மகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் யாழ்/மந்திகையில் நடத்தப்பட்ட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் பெண்கள் அணியினர் தொடர்ந்து 5வது தடவையாக 1இடத்தை பெற்றுக்கொண்டனர். 
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் நேற்றுமுன்தினம் (27.04.2024) யாழ் மந்திகையில் நடாத்தப்பட்ட  வடமாகாணமட்ட  திறந்த(open) மல்யுத்த (wrestling)  போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட , ஆண்கள் அணியினரும், பெண்கள் அணியினரும் முதலிடம் பெற்றுள்ளனர். அத்துடன் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மாகாணமட்ட திறந்த(open) மல்யுத்த(wrestling) போட்டியில்  முல்லைத்தீவு மாவட்டம் முதலிடம் பெற்றிருந்தார்கள்.
இப் போட்டியில்
ஆண்கள் அணி 1ஆம் இடம் முல்லைத்தீவு  6தங்கம் 6 வெள்ளி 3வெண்கலப் பதக்கங்களையும்,
 2 ஆம் இடம் யாழ் மாவட்டம்
2 தங்கம் 2வெண்கலம் 4வெள்ளி
வவுனியா மாவட்டம் 3 ஆம் இடம் 1தங்கம் 1வெள்ளி வெண்கலம் மன்னார்  1தங்கத்தினையும்,
பெண்கள் அணி 10 தங்கம் 8 வெண்கலப் பதங்களைப் பெற்று முதல் இடத்தை தமதாக்கினர்
மேற்படி முல்லைத்தீவு மாவட்ட அணி வீரர்களாக உடையார்கட்டு, வள்ளிபுனம்,  தீர்த்தகரை, மாஞ்சோலை, குமுழமுனை, சிலாவத்தை, கொக்குதொடுவாய், தண்ணீரூற்று, முள்ளியவளை, மாமூலை, தண்டுவான் ,பழம்பாசி,  மாங்குளம், பாலிநகர் ஆகிய பிரதேச வீர வீராங்கனைகள் மேற்படி மல்யுத்த போட்டியில் பங்குகொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் வெற்றிக்காக பங்காற்றியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.