இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
தமிழ் அரசு கட்சியின் ஆதரவின்றி இலங்கையை யாரும் வழிநடத்த முடியாது _திருகோணமலையில் தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தின நிகழ்வில் கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான்! (படங்கள் இணைப்பு)
இதன் போது உரையாற்றிய கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான் தமிழ் அரசு கட்சியின் ஆதரவின்றி இலங்கையை யாரும் வழி நடத்த முடியாது. இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கட்சி வட கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கை மக்களினதும் கொள்கை தீர்மானங்களில் சரியாக வழிநடாத்தினார்கள். தந்தை செல்வா அரசியலில் ஆரம்பம் முதல் இறுதி மூச்சு வரை திறம்பட செயற்பட்டவர். தந்தை செல்வாவின் கொள்கை இன்னும் வாழ்கிறது சௌமிய தொண்டமான் ஆறுமுகம் தொண்டமானுடன் பழகியவர்.தந்தை செல்வாவின் சிலையை திருகோணமலையில் அமைத்து தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து பயணிப்பேன் என்றார்.