இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களின் பாண்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு என்பவை இடம்பெற்றதைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 52 வது படைப்பிரிவின் உப கட்டளைத் தளபதி, பொலிஸார், மத குருமார், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.