இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் முதற்தர தமிழ் இணைய தளம் உங்கள் வீரமுரசு செய்தித்தளம்
வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும், வடமாகாண பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு ஊடக சுதந்திர தொடர்பிலும், ஊடகவியலாளர்களின் சமூக நோக்கம் தொடர்பிலான விளங்கங்களையும், அரசாங்கத்தின் வேலைத்திட்ட செய்தியினை பிரசுசித்தல் பற்றியும், அறநெறி சார்ந்த அறிக்கையிடல் குறித்தும் விளக்கமளித்தார்.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.விஜய நாயக்க, சிறுவர் பிரிவின் – சஞ்சீவவசத்துன குமாரி, ஊடக ஆய்வாளர் சதுரங்க கப்புக்கந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் உள்ளிட்ட 40 வடமாகாண ஊடகவியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.