27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணியில் இன்றைய ஆட்டத்தில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய மற்றும் தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷங்கவுக்குப் பதிலாக விஷ்வ பெர்னாண்டோ மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி இங்கிலாந்து அணியில் டேனியல் லோரன்ஸ், பென் டக்கட், ஒயில் பொப், ஜோ ரூட், ஹரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், அலி ஸ்டோன், ஜோஷ் ஹல், ஷோயப் பஷீர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், இலங்கை அணியில், திமுத் கருணாரத்ன, பதும் நிசங்க, குசல் மெண்டிஸ், எஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமல், தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்னநாயக்கே, விஷ்வ பெர்ணாண்டோ, லஹிரு குமார, அஷித பெர்ணாண்டோ ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

Related posts

யாழ்.பல்கலை மாணவியின் மரணத்தில் சந்தேகம் – பொலிஸில் முறைப்பாடு

sumi

தமிழ் மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் திறந்த மடல் !

User1

யாழ் போதான வைத்தியசாலையில் குழந்தைகள் இறப்பு வீதம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

sumi

Leave a Comment