28.4 C
Jaffna
September 19, 2024
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

அம்பாறை திருக்கோவிலில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு !

அம்பாறை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் இராணும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். கல்முனை பிராந்திய திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் தலைமையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், டெங்கு பரவக்கூடிய வகையில் தமது வீட்டுச் சுழலை வைத்திருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்க்கு எச்சரிக்கை கடிதங்களும வழங்கப்பட்டன.

திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் கே.குணபாலசிங்கம், திருக்கோவில் பிரதேச செயலக கிராம நிருவாக அதிகாரி கே.கந்தசாமி, திருக்கோவில் பிரதேச செயலக கிராம மட்ட உத்தியோகத்தர்கள், திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், காஞ்சிரம்குடா இராணுவ முகாம் அதிகாரிகள், திருக்கோவில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

இந்து இளைஞர் மன்றத்தின் காணியை அபகரிக்க முயற்சி

sumi

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச அபிவிருத்த குழு கூட்டம்..!{படங்கள்}

sumi

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 672 பேர் கைது

User1

Leave a Comment