28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம் உயிரிழப்பு

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று (03) காலை  உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் கிலோ நிறையுடைய இந்த திமிங்கிலம் கரையொதுங்கிய சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திமிங்கிலத்தின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட போட்டிகளில் வவுனியா சைவப்பிரகாச சாதனை!

User1

மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா !

User1

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிவந்த 5 டிப்பர்கள் மடக்கி பிடிப்பு – ஐவர் கைது

User1

Leave a Comment