28.4 C
Jaffna
September 19, 2024
இந்திய செய்திகள்

தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழ முடியாது: அஜித் தோவலிடம் கஜேந்திரன் எடுத்துரைப்பு

13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்ல முடியாது என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கூறியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அஜித் தோவலுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோசம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும், செல்வம் அடைக்கலநாதனுக்கும், தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழ முடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்ல முடியாது எனவும் அஜித் டோவலிடம் கூறியதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தீர்மானம் குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

முதன்முறையாகப்ஜேவிபி தலைவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த இந்தியா.!

sumi

செப்டெம்பர் 21 முதல் சனிக்கிழமைகளிலும் இந்திய-இலங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படும் !

User1

கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள இந்திய போர்க்கப்பல் !

User1

Leave a Comment