28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorized

மின் உபகரண விற்பனை நிலையத்தில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு : மூவர் கைது !

களுத்துறை, பேருவளை நகரத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை, பாணந்துறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, குறித்த விற்பனை நிலையத்திலிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் 18 கையடக்கத் தொலைபேசிகள், 02 மடிக்கணினிகள் மற்றும் 03 தொலைக்காட்சி பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரும் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்காக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

User1

கடன்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு.!

sumi

மரம் விழுந்ததில் மரணமான சிறுவனின் உடல் நல்லடக்கம்.!

sumi

Leave a Comment