• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home Uncategorized

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.!

Mathavi by Mathavi
June 8, 2026
in Uncategorized
0
சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.!
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல்வாதிகளும், தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும், சுரேஷ் சலேவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச,
“மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இந்த நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றிய ஒரு சிறந்த அதிகாரி ஆவார். ஆனால், இன்று புலம்பெயர் புலி அமைப்புகளின் தேவைக்காகவும், அரசியல் பழிவாங்கலாகவும் அவர் பழிவாங்கப்படுகின்றார். தடுப்புக் காவலில் அவர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வருகின்றார். அவருக்குச் முறையான நீதி கிடைக்கும் வரை இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த விசாரணைகள் சட்டப் படியும், முறையான வடிவத்திலும் நடக்க வேண்டுமே தவிர, பழிவாங்கலாக அமையக் கூடாது” – என்றார்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுரேஷ் சலேவின் தாயார் ஊடகங்களுக்கு முன்னால் கண்ணீர் மல்க மிகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

அவர் குறிப்பிடுகையில், “இலங்கைத் தாய்மார்கள் எவரும் இனி தங்களது பிள்ளைகளை இராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்வரக் கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டுக்காக உயிரைக் கொடுத்து உழைத்த என் மகனுக்கே இன்று இந்த நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. நீங்கள் மீறி உங்கள் பிள்ளைகளை இராணுவத்துக்கு அனுப்பினால், எதிர்காலத்தில் என்னைப் போன்றே நீங்களும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய அவல நிலை ஏற்படும்” – என்று அழுதுகொண்டே தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உடல்நிலை மோசமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை – விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை – விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!

by selvan
June 5, 2026
0

சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது...

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தார் ஆர்ஜே பாலாஜி!

by selvan
June 5, 2026
0

தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ரான பிறகு திரை பிரபலங்​கள் அவரை சந்​தித்து வாழ்த்​துக் கூறி வரு​கின்​றனர். கமல்​ ஹாசன், லோகேஷ் கனக​ராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்​டனி உள்​ளிட்​டோர்...

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞன் மரணம்.!!

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞன் மரணம்.!!

by selvan
June 3, 2026
0

வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இருபது வயது இளைஞர் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று(02) மாலை 2.30 மணியளவில் வவுனியா குறிசுட்டகுளத்திலுள்ள காளிகோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை...

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குகிறது சைப்பிரஸ்!

by selvan
June 1, 2026
0

சைப்பிரஸ் (Cyprus) ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடுலைட்ஸ் (Nikos Christodoulides) சமீபத்தில் இந்தியாவிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில்...

கடலில் மாயமாகிய 3 மாணவர்களின் சடலங்கள் மீட்பு!

by selvan
May 31, 2026
0

ஹம்பாந்தோட்டை யில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன 3 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது 3...

ஐ.பி.எல் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் அணி

by selvan
May 25, 2026
0

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உறுதி செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்களால் தோற்கடித்த ராஜஸ்தான்...

மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு!

மே தினக் கூட்டத்தில் இணையுமாறு ஐ.தே.கவுக்கு சஜித் பகிரங்க அழைப்பு!

by Bharathy
April 27, 2026
0

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் தம்மோடு கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித்...

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

இங்கிலாந்து பாடசாலைகளில் அலைபேசிகளுக்குச் சட்டப்பூர்வத் தடை: அரசாங்கம் அதிரடித் திட்டம்!

by Bharathy
April 21, 2026
0

இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டைச் சட்டப்பூர்வமாகத் தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், புதிய...

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

by Bharathy
April 16, 2026
0

பிரிட்டனின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலியான டெஸ்கோ (Tesco), மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் ஈரான் தொடர்பான மோதலால் உருவான அநிச்சய நிலை காரணமாக அடுத்த...

இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்!

இலங்கையை வந்தடைந்த வெளிநாடொன்றின் பாய்மரக் கப்பல்!

by Bharathy
April 15, 2026
0

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI BIMA SUCI - 945’ என்ற பாய்மரக் கப்பல், நல்லெண்ணப் பயணத்திற்காக இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. ஆசியான்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி