28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

5 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து காணொளிகளாக எடுத்த தந்தை கைது !

தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்த தந்தை ஒருவர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.

தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் வெளிநாட்டில் வேலை செய்யும் மனைவியிடம் தனக்கு அதிகளவான பணம் வேண்டும் என்றும் மனைவியின் பெற்றோருக்கு அனுப்பும் பணத்தைத் தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் தனது 05 வயது மகளைத் தாக்கி சித்திரவதை செய்து அதனைக் காணொளிகளாக எடுத்து மனைவியின் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து பணம் கோரியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரின் மனைவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், சந்தேக நபரின் மனைவியின் பெற்றோர் இது தொடர்பில் தெனியாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் மற்றுமொரு தமிழ் வேட்பாளர்

User1

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

sumi

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த வசதிகளை உருவாக்க திட்டம்

User1

Leave a Comment