28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிதாக தெரிவாகும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு 66 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கின் நீலங்களின் சமர் தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு

User1

கராத்தேப் போட்டியில் 10 தங்கப்பதங்கள் உட்பட்ட 29 பதக்கங்களை வென்ற பாடசாலை

User1

இறங்குதுறைப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி ஆளுநரை சந்தித்த மீனவர்கள்.!

sumi

Leave a Comment