• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

Mathavi by Mathavi
June 24, 2026
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!
Share on FacebookShare on Twitter

“போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்? பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற உணர்வோடும், அவர்களுக்காகவே நாம் சேவையாற்றுகின்றோம் என்ற கடமையுணர்வோடும் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.” – இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளுநர் தனது தலைமையுரையில் மேலும் குறிப்பிட்டதாவது,
“இறுதிப் போரின் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்த காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. மக்களின் தனிப்பட்ட ஆவணங்களும் போரால் தொலைந்து போய்விட்டன. போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், எமது மக்கள் தமக்கான காணி உறுதிப்பத்திரங்களுக்காக இன்னமும் அலைந்து திரிகின்றார்கள்.

இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவாகத் தீர்த்து வைப்பதற்காகவே மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன் அவர்களின் எண்ணக்கருவில் இந்த விசேட செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அனைவரதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். இருப்பினும், இத்திட்டத்தின் முன்னேற்றம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை என்பது கவலையளிக்கின்றது.

இந்தக் காணிப் பிரச்சினைகளை நாம் விரைவாகத் தீர்க்காவிட்டால், மக்கள் தினமும் பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் எனது அலுவலகம் எனத் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருப்பார்கள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அதியுயர் பொறுப்புணர்வுடன் களமட்ட உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டும்.” – என்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன், வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 198, 751 காணி தொடர்பான விடயங்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைவதற்காக ஆளுநரின் அனுமதியுடன் ஆளணிச் சீராக்கத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விசேட செயற்றிட்டத்துக்கான கொடுப்பனவுகளுக்கு ஆளுநர் அனுமதியளித்தமைக்காகத் தனது நன்றிகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், அதிகாரிகளின் தாமதங்களால் காணி தொடர்பான நடவடிக்கைகளில் ஏற்படும் சுணக்கம் காரணமாக, மாகாணத்துக்கான பெருமளவு வருமானம் இழக்கப்படுவதாகவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

பின்னடைவுகளுக்கான காரணங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன், தொடர்புடைய அதிகாரிகளிடம் உரிய விளக்கங்களும் கோரப்பட்டன. தொடர்ந்து பின்னடைவைக் காண்பிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான யோசனையையும் மாகாண காணி ஆணையாளர் முன்வைத்தார்.

எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டத்தை மிகத் துரிதமாக முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்த ஆளுநர், பிரதேச செயலாளர்கள் ஒவ்வொரு வாரமும், மாவட்டச் செயலாளர் மாதாந்தமும் இதன் முன்னேற்றங்களை மீளாய்வு செய்ய வேண்டும் என உறுதியான அறிவுறுத்தலை வழங்கினார்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் (காணி), பிரதேச செயலாளர்கள், குடியேற்ற உத்தியோகத்தர்கள், காணி வெளிக்களப் போதனாசிரியர்கள், காணி அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான...

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

by Mathavi
June 24, 2026
0

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணியளவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார், மற்றும்...

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

by Mathavi
June 24, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 24, 2026
0

காலி - பொத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாக்வெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஜின் கங்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொத்தல பொலிஸார்...

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

by Mathavi
June 24, 2026
0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது...

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சித் திறனை மேம்படுத்துவதற்கும், வான்படைச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச். 57 'சீ ரேஞ்சர்' ரக...

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

by Mathavi
June 24, 2026
0

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்குத் தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது...

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், தமிழ் மக்களுக்கு எதிராகக் காலம் காலமாக அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் சர்வதேச ரீதியில்...

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!

செம்மணியில் ஒரே நாளில் 19 எலும்புக்கூடுகள் மீட்பு.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, 3 சிறுவர்களுடையது உட்பட ஒரே நாளில் மிக அதிகளவாக 19 மனித...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி