27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் 734 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 734 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 727 ஆண்களும் 16 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் இருவர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம் 323 மில்லி கிராம் ஐஸ், 6,388 கிராம் 385மில்லி கிராம் கஞ்சா, 1,037 போதை மாத்திரைகள் மற்றும் 3,957 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

Related posts

வெடுக்குநாரி மலையில் பிக்கு குழு சப்பாத்துக்காலுடன் அட்டகாசம்

sumi

திருகோணமலை, குச்சவெளி, இலந்தைக்குளம் பகுதியில் விகாரை அமைக்க காணி துப்புரவு ; அரச அதிகாரிகள் நேரடி விஜயம்

User1

மின் உபகரண விற்பனை நிலையத்தில் 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு : மூவர் கைது !

User1

Leave a Comment