• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

Mathavi by Mathavi
June 27, 2026
in இலங்கை செய்திகள்.
0
ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள் பாரிய சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

“இந்த மகா கொடூரத் தாக்குதலுக்கும் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் ஏதேனும் மறைமுகத் தொடர்புகள் காணப்படுகின்றனவா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகின்றது. எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் அவர் பாதுகாப்புத் தரப்பை வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ‘நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்காக தற்போதைய அரசு முன்னெடுத்து வரும் காத்திரமான பல விசேட உத்திகளை நாம் மனதார ஆதரிக்கின்றோம். இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் இளைஞர் சமுதாயமே திட்டமிட்டபடி அதிகளவில் இலக்கு வைக்கப்படுகின்றது. இதனை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும், இதற்கு உழைக்கும் பாதுகாப்புத் தரப்பினர் அனைவருக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக உள்ளோம்.

இதேவேளை, இலங்கையில் யுத்த காலத்தில் காணாமல்போனோர் விவகாரம் குறித்து பேசிய எமது மதிப்புக்குரிய மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, சுமார் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 644 பேர் வரை காணாமல்போயுள்ளனர் என்று அன்று ஆதாரங்களுடன் கூறியிருந்தார். அவரின் அந்தத் துணிச்சலான வெளிப்படுத்தலே சர்வதேச ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று இன்று நீதிக்காக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

தற்போது யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் புதிய மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை சுமார் 409 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆயர் அன்று கூறிய எண்ணிக்கையை விடவும் தமிழர்கள் இங்கு கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உலகிலேயே மனித எலும்புக்கூடுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பகுதியாகச் செம்மணி மாறிக் கொண்டிருக்கின்றது.

அங்கிருந்து மீட்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் எலும்பு எச்சங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் எந்தளவுக்குக் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்திருப்பார்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இவற்றை சர்வதேச தரத்தில் மரபணு பகுப்பாய்வு செய்வதற்கான விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரசு கூறியுள்ளது, இதனை எவ்வித அரசியல் இழுபறியுமின்றி உடனடியாகச் செய்ய வேண்டும்.

இவற்றுக்கு மத்தியில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அரசு விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதை செய்யப்படுகின்றார், அவர் சிறைக்குள் உண்ணாவிரதம் இருக்கின்றார் என்றெல்லாம் தற்போதைய சூழலில் பொய்ப் பிரசாரங்கள் கிளம்பும் போது, உதய கம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சியில் உள்ள சில இனவாதப் புள்ளிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் துள்ளிக் குதிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் கம்மன்பிலவின் அதீத பதற்றத்தைப் பார்க்கும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அவருக்கும் ஏதேனும் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு உள்ளதா? என்ற நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன. தான் செய்த பிழையை அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் தவறைச் சட்டத்தின் முன்னால் மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு துள்ளுகின்றார். எனவே, பாதுகாப்புத் தரப்பினர் உதய கம்மன்பிலவை உடனடியாகக் கைது செய்து, அவரிடம் முறையான விசாரணைகளை நடத்த வேண்டும்.” – என்று செல்வம் அடைக்கலநாதன் சபையில் மேலும் வலியுறுத்தினார்.

Related Posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

லசந்த, தாஜுதீன், பிரகீத் கொ*லைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்?

by Mathavi
June 27, 2026
0

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொடூரப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியங்களையும், உளவுத்துறைத் தகவல்களையும் திட்டமிட்ட முறையில் மூடி மறைத்த முக்கிய புள்ளிகள்...

தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!

தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!

by Mathavi
June 27, 2026
0

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எவ்வித அரசியல் பழிவாங்கல்களுமின்றிக் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை...

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!

by Mathavi
June 27, 2026
0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

by Mathavi
June 27, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால அவசிய சுற்றுப் பயணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (26)...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார்...

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களால் நீதித்துறை முடக்கம்.!

by Mathavi
June 27, 2026
0

உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் நீதியரசர் வெற்றிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக நீதித்துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்து, நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கான விசேட பிரேரணை...

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை; சி.ஐ.டியில் முறைப்பாடு.!

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபாய் இரத்தினக்கல் கொள்ளை; சி.ஐ.டியில் முறைப்பாடு.!

by Mathavi
June 27, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா சாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபாய் அதிகூடிய சந்தை மதிப்புடைய அரிய...

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பண மோசடி; பிரதி அமைச்சர் பிரதீப்புக்கு எதிராக முறைப்பாடு.!

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பண மோசடி; பிரதி அமைச்சர் பிரதீப்புக்கு எதிராக முறைப்பாடு.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பு, காலிமுகத்திடலில் அண்மையில் 5,000 பரதநாட்டியக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட கின்னஸ் சாதனை முயற்சியின் பின்னணியில், திட்டமிட்ட பாரிய பண மோசடி மற்றும் உழைப்புச் சுரண்டல் அரங்கேறியுள்ளன...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி