28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்விபத்து செய்திகள்

கோர விபத்து :2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலே பலி !

கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்த இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்தி பயணித்துள்ளது.

இதன்போது, அதே திசையில் பயணித்த லொறி ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த லொறியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கோர விபத்து : தனது சகோதரனுடன் வீடு திரும்பிய சிறுமி விபத்தில் பலி

User1

பத்து வயது பெண் சிறுத்தை கம்பி வலையில் சிக்கிய நிலையில் மஸ்கெலியா மவுசாகல லக்கம் பிரிவில்.

User1

மன்னாரில் அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்..! {படங்கள்}

sumi

Leave a Comment