28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

வரி வசூலிக்கும் போலி அதிகாரிகள் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளிலிருந்தே முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே, வரி செலுத்துவோர் அவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் புகார் செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக பீடி இலை இறக்குமதியை தடுக்கும் வகையில் தற்போதுள்ள வரி முறை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தவிர தற்போது பீடி உற்பத்தியின்போது அறவிடப்படும் 2 ரூபாய் வரியே, பீடி இலை இறக்குமதியின் போதும் அறவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி கற்பனையான வரி எனவும் எதிர்பார்த்த வருமானம் 03 பில்லியன் ரூபாய் எனவும், ஆனால் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் குறைவான வருமானமே கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சந்தையில் கிடைக்கும் 90% பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வந்துள்ளன.

பீடி இலை இறக்குமதிக்கு குறைந்த விலையில் அனுமதி வழங்கப்படுவதால், அதற்கான வர்த்தமானி அறிவிப்புடன் வரி திருத்தம் செய்யப்படுவதால், சட்டவிரோத சந்தைக்கு சவால் விடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாகனப் பதிவில் மோசடி.!

sumi

ரயிலில் மோதி இளைஞர் பலி

User1

இடமாற்ற நடைமுறை இல்லையேல் தொழிற்சங்கப் போராட்டம்..!!!

sumi

Leave a Comment