27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் மூன்று யுவதிகள் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு பொலிஸார் சென்று சோதனையிட்டனர்.

விடுதியில் பதிவுகளும் இன்றி தங்கியிருந்ததுடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மூன்று யுவதிகளை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட யுவதிகளை விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேக நபர்களான மூன்று யுவதிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.  

Related posts

மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

User1

யாழ் கோர விபத்து இணுவில் மக்கள் விடுத்த கோரிக்கை..!{படங்கள்}

sumi

உலகம் முழுவதும் செயலிழந்த பேஸ்புக்..!

sumi

Leave a Comment