27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

சிறப்பாக இடம் பெற்ற மடு அன்னையின் ஆவணித் திருவிழா

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15.08.2024) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

சிலாப மறைமாவட்ட ஆயர் விமல் சிறி ஜயசூரிய ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்து உள்ளனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து ஆசியும் இறை மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவில் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கலந்து கொள்ளும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

மாங்குளம் அம்புலன்ஸ் சேவை மூன்று மாதமாக இடைநிறுத்தம்.!

sumi

சமூக ஊடகங்களில் அவதூறு – முதல் நபர் கைது.!

sumi

அழகு நிலையத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்: தேடுதல் உத்தரவு பிறப்பிப்பு

User1

Leave a Comment